அமைதி ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யும் சந்திரிகா
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே செய்த போர் நிறுத்தத்தை மறு ஆய்வு செய்யகுழு ஒன்றை நியமிக்க அதிபர் சந்திரிகா குமாரதுங்கா நியமித்துள்ளார்.
அதிபரின் பாதுகாப்புச் செயலாளர் சிரில் ஹெரால்ட், தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை உயர்அதிகாரிகள் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள். ஆனால், குழுவில் விடுதலைப் புலிகள் இடம் பெறுவார்களாஎன்பதைப் பற்றி எந்தவித தகவலும் இல்லை.
ரணில் மேற்கொண்ட அமைதி ஒப்பந்தம் பிரயோஜனமற்றது என்று கூறியுள்ள சந்திரிகா, அமைதிநடவடிக்கைகளில் தானே ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்த சந்திரிகா நேற்று 39 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தார். இந்நிலையில், இன்று அவர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் இலங்கை அரசியலில் பெரும் புயலைக்கிளப்பியுள்ளது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர் மிலிந்தா மாரகோடா (ரணில்ஆதரவாளர்) தன்னை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைஅரசியலமைப்புச் சட்டப்படி, அமைச்சரை நீக்கும் அதிகாரம் அதிபருக்கே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரிகாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளின் விளைவாக, இலங்கைக்கு அளிப்பதாக இருந்த 176 மில்லியன்டாலர் கடனுதவியை நிறுத்தி வைக்கப் போவதாக உலக வங்கி அச்சுறுத்தியுள்ளது. இதனால் இலங்கைப்பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டவுடன் பங்கு சந்தையில் 10 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டது.
இந் நிலையில், சந்திரிகாவுக்கு ரணில் எழுதியுள்ள கடிதத்தில், தங்களது இந்த நடவடிக்கைகள் அமைதிநடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளாக நிலவி வந்த உள்நாட்டுப் போரைமுடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை பாதுகாக்க முடியாத நிலைக்குஉங்களது நடவடிக்கைகள் தள்ளியுள்ளன என்று சந்திரிகாவுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications