ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கொலை: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பிரமுகர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது கோவை நீதிமன்றம்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் மீரான். இவர் கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் சிலரால்வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் விதமாக கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்றஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார்.

முருகேசன் கொலை தொடர்பாக போத்தனூர் போலீஸார் அபுதாஹீர், அப்துல் நாசர், அஸ்மத் அலி, இப்ராகிம்உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இவர்களில் இப்ராகிம், அஸ்மத் அலி தவிர மற்ற 6 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 6பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 20,000 அபராதமும் விதித்து நீதிபதி மாணிக்கம்தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+