For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கொலை: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பிரமுகர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது கோவை நீதிமன்றம்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் மீரான். இவர் கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் சிலரால்வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் விதமாக கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்றஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார்.

முருகேசன் கொலை தொடர்பாக போத்தனூர் போலீஸார் அபுதாஹீர், அப்துல் நாசர், அஸ்மத் அலி, இப்ராகிம்உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இவர்களில் இப்ராகிம், அஸ்மத் அலி தவிர மற்ற 6 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 6பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 20,000 அபராதமும் விதித்து நீதிபதி மாணிக்கம்தீர்ப்பளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X