சிங்கப்பூர்: பிரம்படி தண்டனையிலிருந்து விதிவிலக்கு கோருகிறார் இந்தியர்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

சக பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கைது செய்யப்பட்ட தமிழரான நிருபர் வித்யாசங்கர்ஐயருக்கு 16 மாத சிறைத் தண்டனையும், 4 பிரம்படியும் வழங்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், பிரம்படியை தனது உடல் தாங்கும் நிலையில் இல்லை என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றுசிங்கப்பூர் அதிபர் நாதனிடம் ஐயர் முறையீடு செய்துள்ளார்.

நியூஸ் ஏசியா தொலைக்காட்சி செய்தி தயாரிப்பாளராக பணியாற்றியவர் வித்யாசங்கர் ஐயர் (37). இவர்திருமணமாகதவர். இவர் கடந்த ஆண்டு தனது அபார்ட்மெண்டில் வைத்து தன்னுடன் பணியாற்றும் சக பெண்ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தான் சதி செய்து மாட்டிவிடப்பட்டதாக ஐயர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ் வழக்கை விசாரித்த நீதிமன்றம், வித்யாசங்கருக்கு 16 மாத சிறைத் தண்டனையும், 4 பிரம்படியும் வழங்கஉத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 3ம் தேதி இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந் நிலையில் வித்யாசங்கர், தனக்கு முதுகுவலி இருப்பதாலும், பிரம்படியை தனது உடல்நிலை தாங்காதுஎன்பதாலும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும், 16 மாத சிறைத் தண்டனையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் சிங்கப்பூர் அதிபர் நாதனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கருணை மனுவுடன் உரிய மருத்துவச் சான்றையும் ஐயர் சமர்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+