சோனியா- கருணாநிதி நாளை சந்திப்பு: புதுவை குறித்து பேச்சு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை சென்னை வருகிறார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது.தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காகவும், கருணாநிதியைநேரில் சந்திப்பதற்காகவும் சோனியா காந்தி நாளை சென்னை வருகிறார்.
அவர் நாளை சென்னை காமராஜர் அரங்கில் காமராஜர் சிலையைத் திறந்து வைக்கிறார். பிற்பகல் 3 மணிக்குகருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது பாண்டிச்சேரி தொகுதி தொடர்பான சர்ச்சை குறித்தும்விவாதிக்கவுள்ளார்.
கருணாநிதியும், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனும் செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தம் தமிழகத்திற்குத்தான்பொருந்தும், பாண்டிச்சேரிக்குப் பொருந்தாது என்று புதுவை காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
சோனியா காந்தியின் சென்னை வருகையையொட்டி சென்னை நகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications