உசிலம்பட்டியில் 23,000 போலி வாக்காளர்கள்!
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொகுதிக்கு சற்றும் சம்பந்தமில்லாத 23,000 பேர் போலி வாக்காளர்களாகசேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணையம், தவறுக்குக் காரணமானஅதிகாரியை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மக்கள் தொகையை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாகஇருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் புகார் அனுப்பப்பட்டது.
இதேபோல, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இது போலவே போலி வாக்காளர்கள் அதிக அளவில்சேர்க்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள14 சட்டசபைத் தொகுதிகள், உசிலம்பட்டி, குளச்சல் ஆகியதொகுதிகளின் வாக்காளர் பட்டியலை முழுமையான மறு ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம்உத்தரவிட்டது.
இதையடுத்து அதிகாரிகள் இந்தத் தொகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்த்துவருகின்றனர். அப்போது உசிலம்பட்டியில் 23,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இவர்களை அதிகாரிகள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கினர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தொகுதிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவர்கள், இவர்கள் உசிலம்பட்டியிலேயேவசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போலி வாக்காளர்கள் சேர்ப்புக்கு உசிலம்பட்டி தாலுகா அலுவலக அதிகாரி ராமசாமி தான் காரணம் என்றுதேர்தல் ஆணையம் கண்டுபிடித்தது. இதையடுத்து இவரை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்க மதுரை மாவட்டஆட்சித் தலைவர் சந்திரமோகனுக்கு கமிஷன் பரிந்துரைத்தது.
இதையடுத்து ராமசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதே போல கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் சிவங்கை மாவட்டம் மானாமதுரையிலும் வாக்காளர்எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை பிரச்சனை:
ஆனால், சென்னையில் போலி வாக்காளர்கள் விவகாரம் ஒரு புறம் இருக்க, ஒட்டு மொத்தத்தில் வாக்காளர்எண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவாகவே உள்ளதும் தெரியவந்துள்ளது. இப்போது சென்னையில்வாக்காளர்கள் எண்ணிக்கை 22.73 லட்சமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications