தமிழக எல்லையில் வீரப்பன்: கர்நாடக அமைச்சர் தகவல்
குல்பர்கா:
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக கர்நாடகஉள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
குல்பர்காவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடக, தமிழக எல்லைப் பகுதியான ஜேவர்கி என்றஇடத்தில் வீரப்பன் நடமாட்டத்தை சிலர் பார்த்துள்ளதாக அதிரடிப்படைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்துஅப்பகுதிக்கு கூடுதல் அதிரடிப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
வீரப்பன் இருக்கும் இடம் தெரிந்துள்ளதால் அப்பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. வீரப்பன்விரைவில் பிடிபடுவான் என்றார் கார்கே.
வைர வியாபாரிகளிடம் ரூ.26 லட்சம் கொள்ளை: வீரப்பன் கும்பல் கைவரிசை?
மைசூர் அருகே வைர வியாபாரிகளிடம் ரூ.26 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதற்கு வீரப்பன் கும்பல்காரணமா என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் தலைச்சேரிக்கு கேரள அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் வைரவியாபாரிகள் இருவரும், மீன் வியாபாரிகள் இருவரும் பயணம் செய்துள்ளனர். பஸ் பிடாடி என்ற ஊர் அருகேசென்று கொண்டிருந்தபோது, பஸ்சுக்குள் இருந்து 2 பேர் துப்பாக்கியுடன் எழுந்து பஸ்சை நிறுத்தியுள்ளனர்.
தாங்கள் இருவரும் போலீஸ் என்று கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் 2 கார்களில் 8 பேர் வந்துள்ளனர். அவர்கள்அனைவரும் ராணுவத்தினரைப் போல் சீருடை அணிந்திருந்தனர். பஸ்சில் இருந்து வைர வியாபாரிகள், மீன்வியாபாரிகளை காருக்குள் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
வைர வியாபாரிகளான ரஷீத் மற்றும் ஷபீரிடம் இருந்து தலா ரூ.10 லட்சம் பணத்தையும், இதாரி என்ற மீன்வியாபாரியிடம் இருந்து ரூ.6 லட்சம் பணத்தையும் பிடுங்கியுள்ளனர். பிறகு நால்வரையும் வழியில் இறக்கி விட்டு,காரில் வந்தவர்கள் மைசூர் நோக்கிப் பறந்துள்ளனர்.
சாலையில் வந்த வாகனங்களில் ஒன்றை நிறுத்தி, பிடாடி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளனர்.போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொள்ளையில் ஈடுபட்டது வீரப்பன் கும்பலாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தரீதியிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications