ஜெ.-வெங்கையா சந்திப்பு: புதுக்கோட்டை பா.ஜ.கவுக்குக் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்துபேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதிமுகவுடன் கடைசி நேரத்தில் கூட்டணி சேர்ந்துள்ள பா.ஜ.க. நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளைகேட்டு வருகிறது. ஆனால் 6க்கு மேல் ஒரு தொகுதி கூட கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா கறாராக கூறிவருகிறார்.

அதிலும், ஜெயலலிதாவின் பரம விரோதியான மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் எம்.பியாக இருந்தபுதுக்கோட்டை தொகுதியைக் கட்டாயம் தர முடியாது என்று அதிமுக தரப்பு கூறி விட்டது. இதனால் திருநாவுக்கரசர்கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

புதுக்கோட்டைத் தொகுதிக்காக பா.ஜ.க. தலைவர்கள் முட்டி மோதிக் கொண்டுள்ள நிலையில், அதிருப்தியில் உள்ளதிருநாவுக்கரசரை அத்வானி, வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் சமாதானப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் நேற்று இரவு வெங்கையா நாயுடு சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், புதுக்கோட்டை தொகுதி குறித்து இப்போதைக்கு கேட்க வேண்டாம். அது தொடர்பாகஅதிமுகவுடன் பேச்சு நடத்தி வருகிறோம். உரிய முடிவு எடுக்கப்பட்டு உங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றார்.

விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்ஆகியோர் வெங்கையாவை வரவேற்றனர். திருநாவுக்கரசருடன், விமான நிலையத்திலேயே வெங்கையா நாயுடுசிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

இன்று ஜெயலலிதாவை வெங்கைய்யா நாயுடு சந்திக்கிறார். அப்போது தொகுதி உடன்பாடு குறித்து பேசப்படும்என்றும், புதுக்கோட்டை தொகுதி குறித்து ஜெயலலிதாவிடம் வெங்கைய்யா நாயுடு வலியுறுத்துவார் என்றும்பா.ஜ.க. தரப்பில் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+