மாணவர்களை அரசு பஸ்சில் ஏற்றாவிட்டால் நடவடிக்கை: அமைச்சர்
சென்னை:
அரசு பேருந்துகளில் மாணவ, மாணவிகளை ஏற்ற மறுத்தால், பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த பால்மனோஜ் பாண்டியன், தென்னரசு, துணை சபாநாயகர்வரகூர் அருணாச்சலம் ஆகியோர், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும், பள்ளி விட்டு வீடுதிரும்பும் மாணவ, மாணவிகளை, அரசு பேருந்துகளில் ஏற்ற ஓட்டுநர்களும், நடத்துநர்களும் மறுக்கிறார்கள்.இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், பள்ளிகளுக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களில் அனைத்துப்பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும், மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அரசுபேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளை பேருந்துகளில் ஏற்ற மறுப்பது தவறு. அந்தத் தவறை செய்யும் ஓட்டுநர், நடத்துநர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் தங்களது இலவச பாஸைத் தொலைத்து விட்டால் அவர்களுக்கு நகல் (டூப்ளிகேட்) பாஸ் வழங்குவதுகுறித்து அரசு பரிசீலிக்கும்.
பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், டியூஷன் போன்றவை முடிந்து இரவில் வீடு திரும்பும் மாணவர்களுக்கு வசதியாகஇலவச பேருந்து பயணத்திற்கு அனுமதிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்கும். தற்போது பள்ளி நேரம் அல்லாத,விடுமுறை நாட்களில், இரவு நேரங்களில் இலவச பாஸ் மூலம் மாணவர்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்யமுடியாது.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றகோரிக்கையை அரசு ஏற்க இயலாத நிலையில் உள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆண்டுக்கு ரூ. 408கோடி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. எனவே இந்தக் கோரிக்கையை ஏற்க இயலாது என்றார் அமைச்சர்விஸ்வநாதன்.












Click it and Unblock the Notifications