திமுக மாநாட்டை எதிர்த்த மனு தள்ளுபடி: மனுதாரருக்கு அபராதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விருதுநகரில் நடைபெறவுள்ள திமுக மாநாட்டைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன்மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்தோடு, தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல்செய்த மனுதாரருக்கு ரூ. 3000 அபராதம் விதித்தது.

விருதுநகரில் திமுக தென் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இந் நிலையில் மாநாட்டைத் தடை செய்யக் கோரிசிவகாசியைச் சேர்ந்த செண்பகமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல்செய்தார்.

அந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் சிர்புர்கர் மற்றும் இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர், மனுதாரருக்கு கடும்கண்டனம் தெரிவித்தனர். எந்தவித அடிப்படையும் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு திட்டமிட்ட விதிமுறைகள் உள்ளன. மாநாடு நடத்துவோர் அதற்கானஅனுமதியை உரிய காவல்துறை அதிகாரிகளிடம் வாங்கி விட்டுத்தான் நடத்துவார்கள்.

அது குறித்து ஆட்சேபம் இருந்தால், உரிய அதிகாரிகளை அணுகி அதை தெரிவிப்பதுதான் முறை. அதை விடுத்துபொது நலன் மனுவைத் தாக்கல் செய்வது தவறானது. இந்த மனுவில் முகாந்திரமே இல்லை என்பதால் இதைதள்ளுபடி செய்வதோடு, தேவையில்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக ரூ. 3000 அபராதமும்விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+