சோனியா கருணாநிதியை சந்தித்தார்: புதுவை பிரச்சனை தீரவில்லை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.பேச்சுவார்த்தையில் பாண்டிச்சேரி தொகுதி குறித்து எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.
திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இச் சந்திப்பு நடைபெற்றது. அண்ணா அறிவாலயவளாகத்தில் உள்ள கலைஞர் அரங்க நுழைவாயிலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள்மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் சோனியாவை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். பின்னர்கருணாநிதி உள்ளிட்டோர் சோனியாவை வரவேற்றனர்.
கருணாநிதிக்கு சோனியா காந்தி சால்வை அணிவித்தார். சோனியாவுக்கு கருணாநிதி பொன்னாடை அணிவித்தார்.பின்னர் சோனியாவுக்கு தேநீர் விருந்து அளித்தார். அப்போது மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இருவரும்விவாதித்தனர்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி,
கருணாநிதியுடனான சந்திப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. அதிமுக-பா.ஜ.க கூட்டணியை தோற்கடிக்கக் கூடியகூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது.
ஜெயின் கமிஷன் இறுதியறிக்கையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கும், திமுகவுக்கும் எந்தவிததொடர்பும் இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜெயின் கமிஷன் இடைநிலை அறிக்கையில்கூறப்பட்டிருந்த சில கருத்துக்களால் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது உண்மைதான்.
நான் வேற்று நாட்டைச் சேர்ந்தவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறி வருகிறார். என்னுடைய மனசாட்சிப்படி நான்இந்தியப் பெண்ணாகத்தான் வாழ்கிறேன். இது குறித்து மற்றவர்கள் கூறுவதை என்னுடைய மனதில் இருந்துதுடைத்து விடுகிறேன்.
பாண்டிச்சேரி தொகுதி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் உடன்பாடு எட்டப்படும். நாகர்கோவில் மற்றும்ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகள் பற்றிய பிரச்சனைகளை எங்கள் கட்சி பொதுச் செயலாளர் கமல்நாத்தே தீர்த்துவிடுவார் என்று கூறினார். இந்தச் சந்திப்பின்போது கமல்நாத் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜிஆகியோரும் உடனிருந்தனர்.
சோனியா காந்தியின் சென்னை வருகையையொட்டி சென்னை நகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன. இன்று இரவே சோனியா காந்தி டெல்லி திரும்புகிறார்.