மதவாத சக்திகளை புறக்கணியுங்கள்: சென்னையில் சோனியா பேச்சு
சென்னை:
சென்னை காமராஜர் அரங்கத்தில் காமராஜர் சிலையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்துவைத்தார்.
இன்று மதியம் சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத், தமிழக காங்கிரஸ் தலைவர்வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், சட்டசபை காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோரும் திமுக தரப்பில் தயாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுஆகியோரும் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து, தேனாம்பேட்டை காமராஜர் அரங்த்திற்குச் சென்றார். பிற்பகல் 2.00 மணிக்குகாமராஜர் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் காமராஜ் அரங்கத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டுபேசினார்.
அக்கூட்டத்தில் புதுவை முதல்வர் ரங்கசாமி, இளங்கோவன், தங்கபாலு, குமரி அனந்தன், சோ.பாலகிருஷ்ணன்,திண்டிவனம் ராமமூர்த்தி, தனுஷ்கோடி ஆதித்தன், பிரபு, மணிசங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், புதுவைகண்ணன் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சோனியா பேசும்போது, வரும் தேர்தல் வரலாற்று முக்கியவத்துவம் வாய்ந்தது. மதவாத சக்திகளிடம்இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. மகாத்மா காந்தி பிறந்த நாட்டில் இத்தகையமதவாத சக்திகளை தமிழக மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது. இதனால் காவிரிடெல்டா இன்று பாலைவனமாகியுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிஅமைந்தால், இரு மாநில விவசாயிகளுக்கும் பாதகம் ஏற்படாத வகையில், இப் பிரச்சனைக்குத் தீர்வு காண்போம்என்றார். பின்னர் அருகில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் அமைந்துள்ள மறைந்த மூப்பனாரின் நினைவிடத்திற்குச்சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications