இப்போதைக்கு அரசியல் கிடையாது: விஜயகாந்த் "பல்டி"
திருச்சி:
உடனடியாக அரசியலில் குதிக்கும் எண்ணம் இல்லை, ரசிகர்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகே அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று நடிகர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்தும், விஜயகாந்த்தும் எப்போது அரசியலுக்கு வருவார்கள் என்று தமிழக மக்கள் "ஆர்வத்துடன்"காத்துக் கொண்டுள்ளனர். அதற்கேற்ப விஜயகாந்த் அடிக்கடி, தான் அரசியலில் குதிக்கப் போவதாகக் கூறிவருகிறார்.
இந் நிலையில் நேற்று திருச்சியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தான் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், ஜாதி, மத பேதமற்ற வகையில் அது இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சென்னை நகரில் பல இடங்களில்விஜயகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
ஆனால் விஜயகாந்த் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்து இப்போதைக்கு உடனடியாக அரசியலில் குதிக்கும்எண்ணம் இல்லை என்று தெரிவித்து ரசிகர்களின் ஆசையை புஸ்வானமாக்கி விட்டார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உடனடியாக அரசியலில் குதிக்கும் எண்ணம் என்னிடம் இல்லை.
எனது ரசிகர்களுடன் விரிவாகப் பேசி, பல்வேறு ஆய்வுகள் நடத்தி அதன் பிறகே ஒரு முடிவுக்கு வருவேன்.
எனது ரசிகர்கள் என்னை தீவிர அரசியலில் ஈடுபடுமாறு நீண்ட காலமாகவே அழைத்து வருகிறார்கள். இருப்பினும்இப்போதைக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. அந்த முடிவை எடுக்க எனக்கு நிறைய கால அவகாசம்தேவைப்படுகிறது.
அதேசமயம், தேவைப்பட்டால், அப்படிப்பட்ட நிலைமை உருவானால் கட்சி ஆரம்பித்து அரசியலில் தீவிரமாகஈடுபடவும் நான் தயங்க மாட்டேன் என்று கூறினார் விஜயகாந்த்.
எனவே, தொடர்ந்து குழப்பத்திலேயே தனது ரசிகர்களை வைத்திருக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார் என்பதுமட்டும் தற்போதைக்கு தெளிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications