கிரிக்கெட் அணி பாக். செல்ல மத்திய அரசு அனுமதி
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப் பயணம் செல்ல மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐசிசி திட்டப்படி, அடுத்த மாதம் பாகிஸ்தான் நாட்டில் இந்திய அணி சுற்றுப்பிரயாணம் செய்ய வேண்டும். ஆனால், இந்தியஅணியின் கேப்டன் செளரவ் கங்குலி, பாகிஸ்தானில் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, மத்திய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங், மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த யஷ்வந்த் சின்ஹா, இந்திய அணி பாகிஸ்தான் செல்வது தொடர்பான அனைத்துவிஷயங்களையும் அலசி ஆராய்ந்தோம். ஆலோசனை முடிவில், இந்திய அணி திட்டமிட்டபடி பாகிஸ்தான் செல்வது என முடிவுசெய்யப்பட்டது.
விளையாட்டு தேதிகளை இந்திய கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் கலந்து பேசி முடிவு செய்யும் என்றார்.
மக்களவைத் தேர்தல் வரும் சமயத்தில், இந்திய அணிக்கு பாகிஸ்தானில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தாலோ, தோல்விகள்ஏற்பட்டாலோ அது பா.ஜ.கவின் தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் என்று மத்திய கருதியது. எனவே, தேர்தலுக்குப் பிறகுபாகிஸ்தான் செல்லலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது.
ஆனால், பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்ட இந்திய கிரிக்கெட் வாரியக் குழு பிரச்சனை ஏதுமில்லை,பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகக் கூறிவிட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் மத்திய அரசும் அனுமதிவழங்கியுள்ளது.
இந்திய அரசின் முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹார்யர் கான் வரவேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications