சைக்கிள், டயர் வண்டிகள்: பா.ம.க.வின் பிரசார வாகனங்கள்!
செங்கல்பட்டு:
பா.ம.கவைச் சேர்ந்த தொண்டர்கள் சைக்கிள்களிலும், மகளிர் அணியினர் டயர் வண்டிகளிலும் கிராமம் கிராமமாகச்சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு நகரில் பா.ம.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,எதிகளின் பலத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர்களது பலவீனத்தைப் புரிந்து கொண்டு அதை வைத்துபிரசார உத்திகளை வகுக்க வேண்டும்.
பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து விட்டோம், வெற்றி கிடைத்து விடும் என்று சோம்பேறியாக இருந்து விடக்கூடாது.
ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ய முயல்வார்கள். அவர்களிடத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன்இருக்க வேண்டும். 24 மணி நேரம் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
பெரிய பெரிய வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ய வேண்டியதில்லை. ஆண்கள் சைக்கிள்களில் போகலாம்.ஒரு சைக்கிளுக்கு இரண்டு பேர் என்ற விகிதத்தில் 10 சைக்கிள்களில் 20 பேராக கிராமம் கிராமமாக சென்றுபிரசாரம் செய்யுங்கள். பெண்கள் டயர் வண்டிகளில் சென்று பிரசாரம் செய்யலாம்.
தினசரி 5 கிராமத்திற்குச் செல்ல வேண்டும். கூட்டணிக் கட்சியினருக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களைமுன்னிருத்தியும், தலித் அமைப்புகளை அரவணைத்தும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications