மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை தேர்தல் ஆணையம் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகளின் (மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரிகள்) கூட்டத்தைநாளை காலை 10 மணிக்கு தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. போலி வாக்காளர்களைஅடையாளம் காணும் பணி சென்னை, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில், நாளை காலை 10 மணிக்கு மாநில தேர்தல் அதிகாரிகளான ஆட்சித் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள்ஆகியோரது கூட்டத்தைக் கூட்டியுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஏற்பாடுகள், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தின்போதுஆலோசிக்கப்படவுள்ளது. தேர்தல் ஆணைய ஆலோசகரான கே.ஜே.ராவ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ராவ் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி ஆகிய இருவரும் இன்று மதுரை சென்று போலிவாக்காளர்கள் குறித்து ஆய்வு நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications