For Daily Alerts
Just In
காஞ்சியில் பிரசாரத்தை தொடங்கும் ஜெயலலிதா
காஞ்சிபுரம்:
முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார் என்று அமைச்சர்சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சோமசுந்தரம் பேசியதாவது:
ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கவுள்ளார். இங்கு நடைபெறவிருக்கும்பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிடுகிறார்.
திமுகவினர் விருதுநகர் மாநாட்டிற்காக சுவர்களை ஆக்ரமித்து விளம்பரம் செய்கின்றனர். இதைக் கருத்தில்கொண்டு அதிமுக தொண்டர்கள் செயலாற்ற வேண்டும்.
புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா அடையாளம் காட்டும் வேட்பாளரே வெற்றி பெறுவார்என்றார்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Sunday, February 15, 2004, 5:30 [IST]