வைகோ வழக்கு: பொடா குழு விசாரிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நக்கீரன் கோபால் ஆகியோர் மீதான வழக்குகளை பொடா மறுஆய்வுக் குழுவிசாரிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
பொடா நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வைகோ, கோபால் மீதான வழக்குகளை பொடா ஆய்வுக் குழுவிசாரிக்க உரிமை இல்லை என்று தமிழக அரசு பூர்வாங்க ஆட்சேபம் தெரிவித்தது.
இதனை பொடா குழு தள்ளுபடி செய்ததுடன், வரும் 16ம் தேதிக்குள் (நாளை) வழக்கு சம்பந்தமானஆவணங்களையும், அரசின் விளக்கத்தையும் அளிக்குமாறு கூறியது. 19ம் தேதியன்று இறுதி விசாரணை குறித்துமுடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவும் தள்ளுபடிசெய்யப்பட்டது. மேலும் பொடா குழு கோரிய ஆவணங்களை அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரியும், நிலுவையில் இருக்கும் வழக்குகளை விசாரிக்கபொடா குழுவுக்கு தடை விதிக்கக் கோரியும், 19ம் தேதி நடைபெற இருக்கும் ஆய்வுக்குழு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications