டாக்டர் பிரகாஷ் வழக்கு: பெண் நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டாக்டர் பிரகாஷ் சம்பந்தப்பட்டுள்ள செக்ஸ் பட விவகார வழக்கை விசாரித்து வரும் பெண் நீதிபதி, தனக்குதர்மசங்கடமாக இருப்பதாக நினைத்தால் ஆண் நீதிபதிக்கு இந்த வழக்கை மாற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இணையதளம் மூலம் பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள், விசிடிக்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தடாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின்எண்ணிக்கையும் பெருமளவில் இருந்தது.

இந்த வழக்கு தற்போது சென்னையில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந் நிலையில்,வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிக்ஸன், சரவணன், விஜயக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில்ஒரு மனு தாக்கல் செய்தனர்.

தங்களது மனுவில், அரசுத் தரப்பின் வசம் உள்ள74 விசிடிக்களையும் எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டும். மேலும் 64 ஆவணங்களை தமிழில் மொழிபெயர்த்து எங்களுக்குத் தர வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தனர். ஆனால் இந்தக் கோரிக்கையை நீதிபதி அசோக் குமார் நிராகரித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த வழக்கை விசாரித்து வரும் பெண் நீதிபதி, தனக்கு தர்மசங்கடமாக இருப்பதாகநினைத்தால் வேறு ஒரு ஆண் நீதிபதிக்கு இந்த வழக்கை மாற்றலாம் என்று யோசனை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+