மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள்: மதுரை- மோகன், நாகர்கோவில்- பெலார்மின்
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தக்கட்சி இன்று அறிவித்தது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியும் இடம் பெற்றுள்ளது.அக்கட்சிக்கு மதுரை, நாகர்கோவில் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வேட்பாளர் தேர்வு, பிரச்சார உத்திகள்உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இதனையடுத்து இன்று கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மதுரை தொகுதியில் தற்போது எம்.பியாக இருக்கும்மோகன் மீண்டும் நிறுத்தப்படுவார் என்றும், நாகர்கோவில் தொகுதியில் தொழிற்சங்கத் தலைவர் பெலார்மின் போட்டியிடுவார்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெலார்மீன் சிறுபான்மை சமுதாயமான கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். நாகர்கோவிலில் இச் சமூக மக்கள் பெருமளவில்வசிப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications