மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகளின் (மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அல்லது மாவட்ட வருவாய்அதிகாரிகள்) கூட்டத்தை இன்று தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. போலிவாக்காளர்களை அடையாளம் காணும் பணி சென்னை, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துவருகிறது.
இந் நிலையில், இன்று மாநில தேர்தல் அதிகாரிகளான ஆட்சித் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள்ஆகியோரது கூட்டத்தைக் கூட்டியுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஏற்பாடுகள், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தின்போதுஆலோசிக்கப்படவுள்ளது. தேர்தல் ஆணைய ஆலோசகரான கே.ஜே.ராவ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ராவ் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி ஆகிய இருவரும் நேற்று மதுரை சென்றுபோலி வாக்காளர்கள் குறித்து ஆய்வு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராவ், வாக்காளர்அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் ஓட்டு போட முடியாது. வாக்காளர் பட்டியலிலும் அவர்பெயர் இருக்க வேண்டும். வரும் 25ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications