கர்நாடக சட்டசபை கலைப்பு
பெங்களூர்:
மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலையும் சந்திக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்துசட்டசபையை வரும் 23ம் தேதி கலைத்துவிடும்படி ஆளுநருக்கு அமைச்சரவை இன்று பரிந்துரை செய்தது.
கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் வரும் நவம்பர் மாதம் வரை உள்ளது. ஆனால், முதல்வர் கிருஷ்ணா தலைமையிலானகாங்கிரஸ் அரசு பெரும் பலத்துடன் உள்ளது. முக்கிய எதிர்க் கட்சியான ஜனதா தளம் சிதறுண்டு போயுள்ளது. அதே போலபா.ஜ.கவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பலத்துடன் இல்லை.
மேலும் ஆட்சியில் இருக்கும் கிருஷ்ணாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருவதால் சட்டசபைத் தேர்தலையும்இப்போதே நடத்திவிட காங்கிரஸ் முடிவு செய்தது.
மாநில காங்கிரஸ் தலைவர் ஜனார்தன பூஜாரி தான் இந்த முடிவை எடுத்தார். இதை கிருஷ்ணா ஏற்க மறுத்து வந்தார். மீண்டும்வென்றாலும் தன்னை மீண்டும் முதல்வராக்க மாட்டார்கள் என்பதால் நவம்பர் வரை சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டியதில்லைஎன்று கூறி வந்தார்.
ஆனால், பெரும்பாலான அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் உடனடித் தேர்தல் நடத்தினால் மீண்டும் வென்றுவிடலாம் என்றுகருத்து தெரிவித்ததால் பூஜாரியின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தைக் கலைக்க சோனியா காந்தி உத்தரவிட்டார்.
கடந்த நாலரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கிருஷ்ணா கர்நாடகத்தை பெரும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார்என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மீண்டும் காங்கிரஸ் வென்றாலும் அவரை முதல்வராக்க மற்ற தலைவர்கள் விட மாட்டார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணா ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர், மீண்டும் அதே சமூகத்தைச் சேர்ந்தவரே முதல்வராவதா என்று அடுத்த முக்கியசமூகமான லிங்காயத்து மற்றும் பிற பிற்பட்ட இன தலைவர்கள் ஆட்சேபம் தெரிவிப்பார்கள் என்பதால் அவருக்கு பதவி மீண்டும்கிடைப்பது கடினமே.












Click it and Unblock the Notifications