சிவங்கையை கேட்கும் ப.சி.

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தனக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டால் தான் காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன் என்று காங்கிரஸ் ஜனநாயகக்பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் கூறிவிட்டதால் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நிலவுகிறது.

இரு தினங்களுக்கு முன் சிதம்பரத்தை டெல்லிக்கு வரச் சொன்ன சோனியா, காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும்என்று அழைத்தார். அப்படியானால் சிவகங்கை உள்பட இரு தொகுதிகளை சிதம்பரம் கேட்டார்.

ஆனால், அதற்குப் பதிலாக கட்சியையே காங்கிரசில் இணைத்துவிடலாமே என சோனியா கூறிய யோசனையை சிதம்பரம்ஏற்கவில்லை. இதையடுத்து பிரனாப் முகர்ஜி, அகமத் படேல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மூலம் சிதம்பரத்திடம் சோனியாபேசினர்.

அப்போது சிவகங்கையை மட்டும் கொடுத்தாலே போதும், மாநிலம் முழுவதும் காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்வேன் எனப.சிதம்பரம் இறங்கி வந்தார். இதையடுத்து அத் தொகுதியின் இப்போதைய காங்கிரஸ் எம்.பியான சுதர்சன நாச்சியப்பனிடமும்பேசிவிட்டு மேற்கொண்டு தகவல் தெரிவிப்பதாக காங்கிரஸ் தலைமை சிதம்பரத்திடம் தெரிவித்துள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் சேர சிதம்பரம் முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீட் கேட்டு அவர்கருணாநிதியை சந்திக்கவும் இல்லை.

தமிழகத்தின் சமூக மாற்றத்திலும் வளர்ச்சியிலும் திராவிட இயக்கங்களின் பங்கை சிதம்பரம் அங்கீகரிக்க மறுப்பதாக ஒருகூட்டத்தில் வைத்து அவருக்கு கருணாநிதி நேரடியாக நோஸ்-கட் கொடுத்தது நினைவுகூறத்தக்கது.

அன்று முதலே இரு தலைவர்களுக்கும் இடையே நல்லுறவு இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+