மதுரையில் போட்டியிடுவேன்: சு.சுவாமி
சென்னை:
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஜனதாக் கட்சி சார்பில் தான் போட்டியிடப் போவதாக சுப்பிரமணிய சுவாமிகூறியுள்ளார்.
மதுரை தொகுதியில் முன்பு அதிமுகவின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களை அசத்தியவர்சுப்பிரமணியம் சுவாமி. ஆனால் அதன் பிறகு ஜெயலலிதாவின் ஆதரவை இழந்த அவர் அரசியலிலும்செல்லாக்காசாகி விட்டார்.
இந் நிலையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக சுவாமிகூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுகவுக்கு எங்களது ஆதரவு உண்டு.மதுரை தொகுதியில் மட்டும் நாங்கள் போட்டியிடவுள்ளோம். அதிலும் நானே போட்டியிடப் போகிறேன். மற்றதொகுதிகளில் அதிமுகவை ஆதரிப்போம்.
சந்திரலேகா இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டார். ஜெயலலிதா கேட்டுக் கொண்டால் அதிமுகவேட்பாளர்களைஆதரித்தும் பிரசாரம் செய்வேன் என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications