அதிமுகவின் நிபந்தனைகளை ஏற்க பா.ஜ.க. முடிவு: நாளை தொகுதிப் பங்கீடு
சென்னை:
பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நாளை அறிவிப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஜெயலலிதாவை மத்திய நலத்துறை அமைச்சரும் மூத்த பா.ஜ.க. தலைவருமான சுஷ்மா சுவராஜ் போயஸ்கார்டனில் சந்தித்து இறுதிக் கட்ட பேச்சு நடத்தவுள்ளார்.
அதே நேரத்தில் புதுக்கோட்டை தொகுதி திருநாவுக்கரசருக்கு இல்லவே இல்லை என்று ஜெயலலிதாதிட்டவட்டமாக அறிவித்துவிட்டதால் அவரை மாநிலங்களவை எம்.பியாக்கிவிட நேற்று பிரதமர் வாஜ்பாய்தலைமையில் நடந்த பா.ஜ.க. ஆட்சி மன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், அதிமுக எந்தத் தொகுதிகளைத் தந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு கூட்டணிப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுஎன்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் பேசியே தங்களது வேட்பாளர்களை இறுதி செய்வது என்றமுடிவுக்கும் பா.ஜ.க. வந்துவிட்டது.
அதே நேரத்தில் மும்பை, டெல்லி, கர்நாடகத்தில் தலா ஒரு சீட் தர வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கைகுறித்து பின்னர் பேசலாம் என்றும், இப்போதைக்கு தமிழக கூட்டணியை இறுதி செய்யலாம் என்றும் அதிமுகவிடம்பா.ஜ.க. கூறியுள்ளது.
பா.ஜ.க. இந்த அளவுக்கு இறங்கி வந்துவிட்டதையடுத்து அக் கட்சிக்கான தொகுதிகளை ஜெயலலிதா நாளைஅல்லது மறுநாள் அறிவித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
கடந்த முறை பா.ஜ.க. வென்ற நீலகிரியைத் திரும்ப அவர்களுக்கே தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு கோவை, நாகர்கோவில், தென்சென்னை, சிவகங்கை, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய தொகுதிகளும்தங்களுக்குத் தரப்படும் என பா.ஜ.க. வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டை மட்டுமல்ல, தமிழகத்தில் வேறு எந்தத் தொகுதியிலும் திருநாவுக்கரசரை நிறுத்தக் கூடாது என்றுபா.ஜ.கவுக்கு ஜெயலலிதா நிபந்தனை விதித்தது குறித்து நேற்று பா.ஜ.க. தலைவர்கள் காரசாரமாக விவாதித்தனர்.
ஆனால், அதிமுக கூட்டணி இல்லாவிட்டால் நாகர்கோவில் தவிர தமிழகத்தில் வேறு எந்தத் தொகுதியிலும்பா.ஜ.கவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்பதை நாயுடு எடுத்துக் கூறியதையடுத்து அதிமுகவின் நிபந்தனைகள்அத்தனையையும் ஏற்பது என்ற முடிவை பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான கூட்டம் எடுத்தது.












Click it and Unblock the Notifications