ஜெவுக்கு பாராட்டு விழா: அரசு ஊழியர் சங்கம் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்குப்பாராட்டு விழா நடத்த சூர்யமூர்த்தி தலைமையிலான அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

மேலும் வரும் 24ம் தேதி நடக்கவுள்ள தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என்றும் அச்சங்கம் முடிவு செய்துள்ளது.

அரசு ஊழியர் போராட்டம் நடந்தபோதே பாதியில் அதிலிருந்து வெட்டிக் கொண்டு வெளியேறியவர் சூர்யமூர்த்தி.அவரது தலைமையிலான அரசு ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கொடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியும்பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மறுவாழ்வளித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு பாராட்டு விழா நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது உயிர் நீத்த அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணியில் இருந்தால் கிடைக்கக்கூடியபண பலன்களை, அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.

வரும் 24ம் தேதி அரசியல் சார்ந்த தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் நடத்தும் வேலை நிறுத்தத்தில்எங்கள் சங்கம் பங்கேற்காது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+