செக்ஸ் டார்ச்சர்: கணவரின் கழுத்தை வெட்டி மனைவி !!!
ஜெயங்கொண்டம்:
செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவரின் கழுத்தை மனைவி கத்தியால் வெட்டினார். இதையடுத்து கணவர் உயிருக்குப்போராடிக் கொண்டுள்ளார்.
தஞ்சை அருகே ஜெயங்கொண்டத்தில் வசித்து வரும் கட்டடத் தொழிலாளிசின்னத்துரை (35). இவரது மனைவிபானுமதி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் கடந்த வாரம் தான் பானுமதி குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து தொண்டார். இதனால் சில வாரங்கள் கணவன், மனைவி உறவு கூடாது எனமருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.
இந் நிலையில் நேற்றிரவு பானுமதியுடன் உறவுக்கு சின்னதுரை முயன்றுள்ளார். டாக்டர்களின் எச்சரிக்கையைசுட்டிக் காட்டிய பானுமதி விலகிச் செல்லவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மனைவியைதகாத வார்த்தைகளால் சின்னதுரை திட்டிவிட்டுத் தூங்கினார்.
இதனால் எரிச்சலடைந்த பானுமதி, சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து சின்னதுரையின் கழுத்தில்வெட்டினார். அதைத் தடுக்க முயன்ற சின்னதுரையின் கையிலும் வெட்டு விழுந்தது. கத்தி தொண்டையில்ஆழமாகப் பதிந்ததால் சின்னதுரையால் போராட முடியாமல் வலியில் அலறித் துடித்தார்.
இதையடுத்து அண்டை வீட்டினர் ஓடி வந்து சின்னதுரையை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால், நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் அவர் அங்கிருந்து தஞ்சை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவர் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளார். கத்தியால் வெட்டிய மனைவி பானுமதிதலைமறைவாகிவிட்டார்.












Click it and Unblock the Notifications