வீண் பேச்சு வேண்டாம்: காங்கிரஸாருக்கு கருணாநிதி கடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸார் ஒற்றுமையுடன் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு, கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

பாண்டிச்சேரி, நாகர்கோவில் தொகுதிகள் தொடர்பாக காங்கிரஸார் தெரிவித்து வரும் எதிர்ப்புகள்,கண்டனங்களால் கருணாநிதி கடும் எரிச்சலடைந்துள்ளார்.

இந் நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், சில காங்கிரஸார் தங்களது பொறுப்புகளை மறந்து விட்டுசெயல்படுகிறார்கள். பேசி வருகிறார்கள். இதனால் கூட்டணிக்குத்தான் பெரும் பாதிப்பு ஏற்படும்.

கூட்டணியின் வெற்றிக்காக காங்கிரஸார் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் அதிக இடங்களில் நமது கூட்டணிக்கு வெற்றி கிடைத்தால்தான் சோனியா காந்தி பிரதமர் ஆவதில்சிக்கல் இருக்காது. இதை காங்கிரஸ் நண்பர்களும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

அதை மட்டுமே நோக்கமாக கொண்டு, நமது சக்தியை வேறு விதத்தில் வீணாக்காமல் செயல்படுமாறுகாங்கிரஸாரை கேட்டுக் கொள்வதாக கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+