இலங்கை கிருஸ்துவ விவகாரத்துறை அமைச்சரும் நீக்கம்
கொழும்பு:
இலங்கை கிருஸ்துவ விவகாரத்துறை கேபினட் அமைச்சரை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் அதிபர்சந்திரிகா. இதற்கான உத்தரவு நேற்றிரவு வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றத்தைக் கலைத்த கையோடு, பிரதமர் ரணிலின் அமைச்சரவையில் இருந்த 39 துணைஅமைச்சர்களையும் நீக்கினார் சந்திரிகா. இந் நிலையில் கேபினட் அந்தஸ்தில் இருந்த கிருஸ்துவ விவகாரத்துறைஅமைச்சரான ஜான் அமரதுங்காவையும் நீக்கம் செய்துள்ளார்.
மேலும் ஜான் மற்றும் நீக்கப்பட்ட 39 துணை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் வாபஸ்பெற்றுள்ளார்.
முதலில் உள்துறை அமைச்சராக இருந்த ஜான், கடந்த நவம்பர் மாதம் கிருஸ்துவ விவகாரத்துறைக்குமாற்றப்பட்டபோது அவர் முறையாக என் முன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை என்பதால் அவரைபதவி நீக்கம் செய்துள்ளதாக சந்திரிகா கூறியுள்ளார்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கிருஸ்துவ மத வழிபாட்டு மையங்கள் மீது தாக்குதல் நடப்பது அதிகரித்துவரும் நிலையில் சந்திரிகாவின் இந்தச் செயல் அச் சமூக மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.