For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவில் சேருகிறார் ப.சிதம்பரம் கட்சி எம்.எல்.ஏ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கட்சியின் எம்.எல்.ஏவான புரசைவாக்கம் ரங்கநாதன் திமுகவில்சேர முடிவு செய்துள்ளார். இதனால் சிதம்பரத்தின் கட்சி சட்டசபையில் பிரதிநிதித்துவம் இழக்கிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய ப.சிதம்பரம் பின்னர் அமைத்த காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை கட்சியில் ரங்கநாதனும் இணைந்தார். ப.சிதம்பரத்திற்கு நெருக்கமானவராகத் திகழ்ந்த ரங்கநாதனுக்குகடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சீட் தரப்பட்டது.

அவர் உதயசூரியன் சின்னத்தில் சென்னை புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சமீப காலமாக ப.சிதம்பரத்திற்கும், புரசை ரங்கநாதனுக்கும் இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. சிலமாதங்களுக்கு முன் நிலத் தகராறு ஒன்றில் அடியாட்களுடன் சென்று சிலரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில்புரசை ரங்கநாதன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோயிருந்தார். முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகற்பகவிநாயகம், மக்கள் பிரதிநிதியான நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று கண்டித்ததோடு, மதுரை காந்திஅருங்காட்சியகத்தில் தினமும் காந்தியடிகளின் சத்தியசோதனையை படிக்க வேண்டும் என்று உத்தரவுபிறப்பித்தார்.

அதன் பின்னர் சென்னைக்கும் வந்து காந்தி நூல்களைப் படிக்க உத்தரவிடப்பட்டார். பின்னர் ஒரு வழியாகஅவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக புரசை ரங்கநாதனுக்கும், ப.சிதம்பரத்திற்கும்இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகத் தெரிகிறது.

இதனால் திமுகவில் இணைந்து விட ரங்கநாதன் முடிவு செய்துள்ளார். வரும் 20ம் தேதி திமுக தலைவர் கருணாநிதிமுன்னிலையில் அவர் திமுகவில் இணையவுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் ப.சிதம்பரத்தின் கட்சிக்கு திமுக தனது கூட்டணியில் இடம் தரவில்லை. இதனால்திமுக மீது அவர் அதிருப்தியுடன் இருக்கும் நிலையில் அவரது கட்சி எம்.எல்.ஏவை திமுக இழுத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X