காங்கிரசுக்கு பாண்டிச்சேரியை விட்டுத் தர ராமதாஸ் முரண்டு
சென்னை:
புதுவை உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலும், தேர்தல்அறிக்கையும் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதுவை உள்ளிட்ட 6 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கானபாமக வேட்பாளர்கள் பட்டியல் அடுத்த வாரம் அறிவிக்கப்படும். பாண்டிச்சேரி முடிந்துபோன விவகாரம். அதைமீண்டும் கிளற நான் தயாராக இல்லை. அங்கு பா.ம.க. தான் போட்டியிடும்.
உண்மையில் பார்த்தால், சோனியா காந்தியை பிரதமராக்கத் தான் பா.ம.க. இந்தக் கூட்டணியில் உள்ளது. அப்படிஇருக்கையில் பா.ம.கவை எப்படி காங்கிரசார் தனியாகப் பார்க்கலாம். சோனியா பிரதமராவதில் அவர்களுக்குஆர்வமில்லையா?. பா.ம.கவின் வெற்றிக்குப் பாடுபட வேண்டிய கடமை காங்கிரசாருக்கு உண்டு.
தேர்தலின்போது வன்முறையைத் தூண்ட ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே வாக்குப்பதிவின்போது அண்டை மாநில போலீஸாரையும் அனைத்துத் தொகுதிகளிலும் நிறுத்த தேர்தல் கமிஷன்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குப் பதிவை நடத்தி முடிக்க வேண்டும். வருகிற 20ம் தேதி தேர்தல் ஆணையம்ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்துவோம் என்றார்.