மதிமுகவினரை பொடா வழக்கிலிருந்து விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
வைகோவுடன் கைது செய்யப்பட்ட 8 மதிமுகவினரையும் பொடா வழக்கிலிருந்து விடுவிக்க சென்னைஉயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகவைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில்வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில் வைகோ தவிர மற்ற 8 மதிமுகவினரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பூந்தமல்லிபொடா நீதிமன்றத்தில் மனு செய்தனர். ஆனால் இந்த மனுக்களை பூந்தமல்லி நீதிமன்றம் நிராகத்துவிட்டது.
இதையடுத்து 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்தநீதிபதிகள் சிர்புர்கர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இவர்களது மனுக்களைதள்ளுபடி செய்தது.
பொடா நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த மனுக்கள் தேவையற்றவை என நீதிபதிகள்கருத்துத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications