வறட்சியால் காலியாகும் தமிழக கிராமங்கள்
மதுரை & திருச்சி:
போலி வாக்காளர்கள் தொடர்பாக மதுரை மாவட்டத்தில் தேர்தல் கமிஷன் நடத்திய ஆய்வின்போது ஒருபீதியூட்டும் உண்மை வெளிப்பட்டது.
மாவட்டத்தின் கடும் வறட்சி காரணமாக பல்வேறு ஏழை, விவசாய, கூலித் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாகஊரை விட்டே வெளியேறியுள்ளனர். வறட்சியால் தமிழகத்தின் வேறு எநத்ப் பகுதியிலும் வேலை வாய்ப்புக்கள்இல்லாததால் அவர்கள் வட மாநிலங்களிலும், ஆந்திரா, கர்நாடகத்திலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதனால் பல்வேறு கிராமங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அங்குஇல்லை. ஆனால், இவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டிய அதிகாரிகள் அதைச் செய்யவில்லை.
முதியோரும், உடல் ஊனமுற்றவர்களையும் மட்டும் விட்டுவிட்டு பல குடும்பங்கள் பிழைப்பு தேடி ஊரையே காலிசெய்து கொண்டு வெளியேறியுள்ளன.
பலர் திருப்பூர், கோவை போன்ற இடங்களில் ஜவுளி ஆலைகளில் வேலைகளில் சேர்ந்தாலும் பெரும்பாலனவர்கள்ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் வட மாநிலங்களுக்கும் கூலி வேலைக்காகசென்றுள்ளனர்.
விவசாய வேலைகளே நடக்காத நிலையில் சாப்பாட்டுக் கூட சிரமமப்படும் பிற விவசாயக் குடும்பங்கள் தங்களிடம்உள்ள விவசாயக் கருவிகளை வட மாநில ஏஜென்டுகளிடம் விற்க ஆரம்பித்துள்ளனர். நிலத்தை உழபயன்படுத்தப்படும் டீசல் மோட்டார் கொண்ட டிரில்லர்கள் தான் மிக அதிகமாக இவ்வாறு விற்கப்படுகினறன.
தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 30 டிரில்லர்களை ஏஜென்டுகள் வாங்கிச்செல்வதாக சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய டிரில்லர்களின் விலை ரூ.80,000 வரை உள்ள நிலையில் பழைய டிரில்லர்களை ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை விவசாயிகள் விறறுவருகின்றனர்.
இவை பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இவற்றை வாங்கி விற்க இந்த இரு மாவட்டங்களில் மட்டும் 15க்கும் மேற்பட்ட ஏஜென்டுகள் உள்ளார்களாம்.
இந்தியா ஒளிர்கிறது!! என பத்திரிக்கைகள், டிவியில் கோடிக்கணக்கான செலவில் விளம்பரங்கள் வந்தாலும்தமிழக கிராமங்களின் நிதர்சனமான நிலை இது தான்.












Click it and Unblock the Notifications