தமிழக வறட்சி: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு வெள்ளிக்கிழமை வரவுள்ளது.

9 பேர் கொண்ட இக் குழு, தினேஷ் ராய் என்ற அதிகாரியின் தலைமையில் வருகிறது. இதில் விவசாயத்துறை,கால்நடைத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இக் குழு சென்னையில் தமிழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும். இதன் பின்னர்முதல்வர் ஜெயலலிதாவுடனும் ஆலோசனை நடத்தவுள்ள இக் குழு இதையடுத்து மூன்றாகப் பிரிந்து மாநிலத்தின்பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்யவுள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இக் குழுக்கள் தங்களது நேரடி ஆய்வை மேற்கொள்ளும். நீரின்றி வறண்ட காவிரிப்படுகை மாவட்டங்கள், சென்னை நகர வறண்ட ஏரிகள் ஆகியவற்றையும் இக் குழுவினருக்கு தமிழக அதிகாரிகள்காட்டவுள்ளனர்.

இதையடுத்து டெல்லி திரும்பும் இக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.

வறட்சி பாதிப்பை சமாளிக்க ரூ. 1,584 கோடி நிதியையும், 10.8 லட்சம் டன் அரிசியையும் மத்திய அரசிடம்தமிழகம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+