For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காசு கேட்டதால் காதைக் கடித்தவர் !!

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காததை கேட்ட ஹோட்டல் உரிமையாளரின் காதை கடித்துத் துப்பினார் வயிறுமுட்ட தின்ற நபர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்ற ஊரில்தான் இந்த ஜில்லிடும் நிகழ்ச்சி நடந்தது.

இப் பகுதியைச் சேர்ந்த முருகன் ஆலூர் என்ற இடத்தில் ஹோட்டல் வைத்துள்ளார். இவரது ஹோட்டலுக்குசிவசுப்ரமணியன் என்பவர் சாப்பிட வந்துள்ளார்.

ஏகப்பட்ட அயிட்டங்களை உள்ளே தள்ளிய சிவசுப்பிரமணியம் சாப்பிட்டு முடிந்ததும், அப்படியே கிளம்பஎத்தனித்தார். இதைப் பார்த்த முருகன், அவரைத் தடுத்து நிறுத்தி சாப்பிட்டதற்கு காசு கேட்டுள்ளார்.

எங்கிட்டயே காசு கேக்குறியா, அவ்வளவு தெனாவட்டா என்று வடிவேலு ரேஞ்சுக்கு கோபப்பட்டவர் முருகன் மீதுபாய்ந்தார். அவரது ஒரு காதைக் கடித்தார். பலமாக கடித்ததில் காது துண்டானது. இதையடுத்து அதைத் துப்பிவிட்டு தப்பியோடிவிட்டார்.

காது "கட்" ஆனதால் அலறித் துடித்த முருகனை அங்கிருந்தவர்கள் கோட்டார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் முருகன் கொடுத்த புகாரின்பேரில் காது கடி சிவசுப்ரமணியனை போலீஸார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X