For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 80 அரசு பதவிகள் ஒழிப்பு: தேர்தல் பணிகள் பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி:

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் 80க்கும் மேற்பட்டபணியிடங்களை அரசு ஒழித்துக்கட்டி விட்டதாகத் தெரிகிறது.

தர்மபுரி மாவட்டத்தைப் பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டத்திற்கான 134வருவாய்த்துறை பணியிடங்களில், 45 பணியிடங்களுக்கு தர்மபுரி மாவட்டத்திலிருந்து ஊழியர்கள்மாற்றப்பட்டுள்ளனர்.

வட்டாட்சியர் உள்ளிட்ட எஞ்சிய பணியிடங்களுக்கு பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்களை அரசுஇடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கோவை, ஈரோடு, சேலம்,மதுரை, திருநெல்வேலி என பிற ஊர்களைச் சேர்ந்தவர்களை இங்கு மாற்றி விட்டு, இங்குஏற்படுத்தப்படவேண்டிய 80க்கும் மேற்பட்ட பணியிடங்களை அரசு ஒழித்து விட்டதாக வருவாய்த்துறைஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தவிர, இட மாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு திடீரென டிரான்ஸ்பர் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.இதனால் இதில் பெரும்பாலானவர்கள் இன்னும் பணியில் சேரவில்லை. இதனால் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புஉள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் பணியில் சேர்ந்தால் தான் பட்டியலே வெளியிட முடியும் என்ற நிலை உள்ளதால் தேர்தல் அதிகாரிகள்டென்சனில் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X