For Daily Alerts
Just In
ஜெவுக்கு எதிராய் தெருத் தெருவாய் பிரச்சாரம் செய்வேன்: இளங்கோவன்
டெல்லி:
வரும் மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக தெருத் தெருவாகப் போய் பிரச்சாரம் செய்வேன் என்றுமுன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
டெல்லியில் அவர் கூறுகையில், கோபிச்செட்டிப் பாளையம் தொகுதியில் போட்டியிட மனு முடிவு செய்துகட்சியிடம் மனு கொடுத்துள்ளேன். என்னைப் போலவே காங்கிரஸ் நண்பர்கள் மேலும் 3 பேரும் மனுசெய்துள்ளனர். கட்சி அனுமதி தந்தால் போட்டியிடுவேன்.
ஜெயலலிதாவை எதிர்த்து இந்தத் தேர்தலில் தெருத் தெருவாகப் போய் பிரச்சாரம் செய்வேன். 40 தொகுதிகளிலும்தோற்கடிக்கப்பட வேண்டியவர் ஜெயலலிதா.
கோபிச்செட்டிப்பாளையத்தில் என்னை சமாளிக்கவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு முக்கியபதவியை ஜெயலலிதா தந்துள்ளதாக சொல்கிறார்கள். அது குறித்து எனக்குத் தெரியாது. செங்கோட்டையன் என்நண்பர். அவருக்கு பதவி கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, February 18, 2004, 5:30 [IST]