போலீஸ் டார்ச்சர்: காவலில் நக்கீரன் நிருபர் உடல நலம் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்து வரும் நக்கீரன் நிருபர் சுப்பு என்ற சுப்புரத்தினம்சுகவீனமடைந்துளளார். போலீசாரின் அத்துமீறல் காரணமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

போலீஸ் உளவாளி தங்கவேல் என்பவர் வீரப்பனால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சுப்பு மீது பவானிபோலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இரு வாரங்களுக்கு முன் தனது மனைவி, குழந்தையுடன்திருவனந்தபுரத்தில் இருந்த சுப்புவை தமிழக போலீஸார் கைது செய்து அங்கிருந்து கடத்தி வந்தனர்.

இந் நிலையில் பவானி நீதிமன்றம், சுப்புவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. அதன்படிபவானி போலீஸார் சுப்புவை தங்கள் வசம் வைத்து விசாரித்து வந்தனர்.

இந் நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கோவை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும்அவர் பவானி கொண்டு செல்லப்பட்டார்.

நாளை அவர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பவானி போலீஸார், சுப்புவிடம் அத்துமீறி நடந்து வருவதாகவும் இதனால்தான் அவருக்கு ரத்தக் கொதிப்புஅதிகமாகி சுகவீனம் ஏற்பட்டதாக சுப்புவின் வழக்கறிஞர் மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+