7 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!
சென்னை:
4 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் எந்த அதிகாரியும் பணி புரியக் கூடாது என்று மத்திய தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் 7 எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது. ஒரே இடத்தில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய கலெக்டர்கள், போலீஸ், நிர்வாகத்துறைஅதிகாரிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒன்று.
இந் நிலையில் தமிழகத்தில் 7 காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அண்ணாநகர் துணை கண்காணிப்பாளராக இருந்த கருணாசாகர், உதவி ஐ.ஜியாக்கப்பட்டு சென்னைடிஜிபி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போல கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ராமசுப்ரமணியமும் மாற்றப்பட்டுள்ளார்.விருதுநகர் காவல்துறைக் கண்காணிப்பாளரும் மாற்றப்பட்டு அங்கு அறிவுச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications