எச் 1பி விசா: இந்த ஆண்டுக்கான கோட்டா முடிந்தது
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்த ஆண்டுக்கான எச்-1 பி விசா கோட்டா பூர்த்தியாகிவிட்டதாகவும், இந்த ஆண்டு இனிமேல் யாருக்கும் விசாவழங்கப்பட மாட்டாது என அமெரிக்க குடியுரிமைத்துறை அறிவித்துள்ளது.
ஆனால், இந்த ஆண்டு விசா வழங்கும் காலம் துவங்கி 5 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில், 65,000க்கும்மேற்பட்ட விண்ணப்பங்கள் குடியுரிமைத் துறையில் குவிந்துவிட்டன. இதனால் இந்த விசா கோரி இந்த ஆண்டுஇதற்கு மேல் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துறையின் செய்தித் தொடர்பாளர் கிரிஸ் பென்ட்லி நிருபர்களிடம் கூறுகையில்,
வரும் ஏப்ரல் வரை புதிய விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது. அதே போல அக்டோபர் 1 வரை புதிய விசாக்கள்வழங்கவும் மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications