இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்களை மீட்க சின்ஹாவுக்கு கருணாநிதி கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை சிறைகளில் வாடி வரும்தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கக் கோரிவெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், யாழ்ப்பாணம் சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் தமிழக மீனவர்கள்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 67 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த மீனவர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதோடு, இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளகோடிக்கணக்கான மதிப்புள்ள தமிழக மீனவர்களின் படகுகைளயும் வலைகளையும் மீட்க மத்திய அரசு உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கையைஎடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications