வைகோ வழக்கில் பொடா மறு ஆய்வுக் குழு 24ம் தேதி இறுதி விசாரணை
சென்னை:
வைகோ, கோபால் ஆகியோர் மீதான பொடா வழக்குகளை பிரித்து தனித்தனியாக விசாரிக்க பொடா மறுஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது. மேலும் வைகோவின் வழக்கு விசாரணையை பிப்ரவரி 24ம் தேதிக்குள்முடித்துவிடவும் குழு முடிவு செய்துள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் மீது தமிழக அரசுதொடர்ந்துள்ள பொடா வழக்குகளை இதுவரை இந்தக் குழு ஒரே வழக்காக விசாரித்து வந்தது.
இனிமேல் இவற்றைப் பிரித்து விசாரிக்கப் போவதாக குழுவின் தலைவர் நீதிபதி சஹார்யா தெரிவித்தார்.
வைகோ மீதான வழக்கு விசாரணையை 24ம் தேதியுடன் முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் அவரதுவழக்கு விசாரணை இனிமேல் தினந்தோறும் நடக்கும் என்றும் தெரிவித்தார்.
கோபால் மீது தமிழக அரசு இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாததை சுட்டிக் காட்டிய சஹாரியா, அவர்தொடர்பான சில ரகசிய ஆவணங்களை தமிழக அரசு எங்களிடம் வழங்கிய பின்னரே விசாரணை தொடர்பாகமுடிவெடுப்போம் என்றார்.
வைகோ தொடர்பான ஆவணங்களை இந்தக் குழு பலமுறை கேட்டும் கடந்த 16ம் தேதி அவற்றை தமிழக அரசுமுறைப்படி வழங்கியது.
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வைகோ, கோபால் மீதான வழக்குகளை விசாரிக்கலாம் ஆனால், தீர்ப்பளிக்கக் கூடாது என இந்தக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications