பா.ஜ.க- அதிமுக கூட்டு சதி: திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

அதிமுகவிடம் இருந்து புதுக்கோட்டை தொகுதியை வாங்கித் தராமல் திருநாவுக்கரசரை பா.ஜ.க. ஏமாற்றிவிட்டதாகஅவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் புதுக்கோட்டை பா.ஜ.க. அலுவலகம் அவர்கள் போராட்டமும் நடத்தினர். பா.ஜ.கவுக்கு எதிராககடுமையான கோஷங்களையும அவர்கள் எழுப்பினர். திருநாவுக்கரசரை அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து பா.ஜ.க.திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.

கட்சியின் திருநாவுக்கரசரின் வளர்ச்சியைப் பிடிக்காத தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தான் இந்த மோசடிக்குக்காரணம் என்று அவர்கள் கூறினர். வரும் தேர்தலில் இங்கு போட்டியிடும் அதிமுகவை தோற்கடிப்போம் எனவும்தெரிவித்த அவர்கள் திருநாவுக்கரசரே சொன்னாலும் பா.ஜ.க- அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்யமாட்டோம் என்றனர்.

இவர்கள் நடத்திய திடீர் போராட்டம் காரணமாக பா.ஜ.க. அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

இதற்கிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு,

புதுக்கோட்டை தொகுதி கிடைக்காத காரணத்தால் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+