தமிழக அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்க தடை !
சென்னை:
அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மீறி வாங்கினால்கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் திருமணத்தின்போதும், மகன், மகள் திருமணத்தின்போசும் வரதட்சணைவாங்கவில்லை என்பதை எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும். வாங்கப்பட்ட சீர் வரிசைப் பொருட்களையும்தெரிவிக்க வேண்டும்.
அதில் மணமகன், மணமகள், மாமனார் ஆகியோர் கையெழுத்திட்டுத் தர வேண்டும். வரதட்சணை வாங்கியதாகஉறவினர்களோ, மற்றர்வர்களோ புகார் செய்தால் அந்த ஊழியர் மீது அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் என்றுகூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு கடந்த 4ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மணமகள் வீட்டினர்ஹீரோ ஹோண்டா வாங்கித் தரவில்லை என்று திருமண மண்டபத்தில் இருந்து மணமகன் வெளியேறினார். அவர்அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக உள்ளார்.
தமிழக அரசின் இந்த உத்தரவுப்படி முதல் முதலில் அவர் மீது நடவடிக்கை பாயலாம் என்று தெரிகிறது. அவரதுபதவிக்கும் வேட்டு வைக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications