For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீடுகளின் மீது விழுந்து வெடித்த மிக்: 4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ஜாம்நகர்:

குஜராத் மாநிலம் ஜாம்நகர் அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம்வீடுகளின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் விமானி உயிர் தப்பிவிட்டார். ஆனால், வீடுகளில் இருந்த 4பேர் உயிரிழந்தனர். மேலும் 17க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

லக்கா பாவல் என்ற கிராமத்தின் மீது பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் திடீரென தரையை நோக்கிப்பாயந்தது. இதையடுத்து விமானி பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கிவிட்டார்.

ஆனால், விமானம் வீடுகளின் மீது விழுந்து வெடித்துச் சிதறியதில் அங்கிருந்த 18 வயது வாலிபரும், 4 வயதானசரினா உஸ்மான் என்றசிறுமியும் முர்தஸா மமத் என்ற 5 வயது சிறுவனும், 50 வயதான அப்துல்கரீம் என்பவரும்உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இன்று காலை 9.42 மணிக்கு இச் சம்பவம் நடந்தது. மோதிய வேகத்தில் விமானம் ஐந்து பெரிய துண்டுகளாகசிதறியது. இதனால் விமானம் மோதிய வீடும் அருகாமையில் இருந்த 7 வீடுகளும் உடைந்து சிதறி, தீப் பிடித்துக்கொண்டன.

இந்திய விமானப் படையின் பயிற்சி விமானிய ஒருவர் மிக்-21 விமானத்தில் வழக்கமான பயிற்சியில்ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. காயமடைந்தவர்களில் 3 பேர் குழந்தைகள், 2 பேர் பெண்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X