பா.ஜ.க. தேர்தல் குழு கூட்டம்: புறக்கணித்தார் திருநாவுக்கரசர்
சென்னை:
சென்னை பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்த தேர்தல் குழுக் கூட்டத்தை மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்புறக்கணித்தார். இதன்மூலம் மாநில பா.ஜ.க. தலைவர்கள் மீது தனக்குள்ள கோபத்தை வெளிப்படையாகவேகாட்டியுள்ளார் திருநாவுக்கரசர்.
தனக்கு புதுக்கோட்டை தொகுதி கிடைத்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணையாக சிலமூத்த தமிழக பா.ஜ.க. தலைவர்களும் சேர்ந்தே கூட்டுச் சதி செய்ததாக திருநாவுக்கரசர் கருதுகிறார்.
குறிப்பாக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் ஆகிய இருவர் மீதும்கடும் கோபத்தில் உள்ளார் திருநாவுக்கரசர். கட்சியின் தான் அடைந்த மிக வேகமாக வளர்ச்சியைப் பொறுக்காதஇருவரும் அதிமுகவுடன் சேர்ந்து உள்வேலை பார்த்து தன்னைக் கவிழ்த்துவிட்டதாக அவர் நினைப்பதாக அவரதுஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
புதுக்கோட்டை இல்லாமலேயே அதிமுகவுடன் தொகுப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதும், இந்த இருவரும்தொகுதிப் பங்கீடு திருப்தி தருவதாக பேட்டியளித்தது நினைவுகூறத்தக்கது. ஆனால், திருநாவுக்கரசரின்ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கிய பின்னரே புதுக்கோட்டை கிடைக்காதது அதிருப்தி தருவதாகஇல.கணேசன் பல்டி அடித்தார்.
இந் நிலையில் நேற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திருநாவுக்கரசர், பிற்பகலில் தி.நகரில் உள்ளபா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் நடந்த தேர்தல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்காமல்புறக்கணித்தார்.
சென்னையில் இருந்தால் கூட்டத்திற்குப் போக வேண்டியிருக்கும் என்பதால் தனது குடும்பத்தினருடன்திருவட்டாறு கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இதனால் பா.ஜ.க. தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் டென்சன் நிலவியது. திருநாவுக்கரசர் புறக்கணித்த கோபத்தைமறைக்க முடியாமல் உட்கார்ந்திருந்தார் கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன்.
இதற்கிடையே நேற்றும் இரண்டாவது நாளாக திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் புதுக்கோட்டை பா.ஜ.க.அலுவலகத்தின் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications