கருணாநிதியை தரக்குறைவாய் திட்டிய எஸ்.எஸ்.சந்திரன் மீது போலீஸ் வழக்கு
விழுப்புரம்:
விழுப்புரத்தில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், திமுகதலைவர் கருணாநிதி குறித்து நாகூச வைக்கும் வார்த்தைகளால் திட்டியது குறித்து போலீசாரிடம் திமுகவினர் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து சந்திரன் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் எஸ்.எஸ்.சந்திரன் எம்.பி. பேசினார்.அமைச்சர் சி.வி.சண்முகமும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது கருணாநிதி குறித்தும், திமுக தலைவர்கள் குறித்தும் எஸ்.எஸ்.சந்திரன் மிகவும் தரம் தாழ்ந்துவிமர்சித்ததாக கிளியனூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், திமுக வழக்கறிஞர்கள் பிரிவுத் தலைவருமானஅசோக் போலீஸில் புகார் கொடுத்தார்.
முதலில் இதை வாங்க போலீசார் மறுத்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் சந்திரன் மற்றும் போலீசாருக்கு எதிராகவழக்குத் தொடரப் போவதாக அசோக் எச்சரிக்கை செய்யவே, அவரது புகாரை போலீஸார் ஏற்றனர்.எஸ்.எஸ்.சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications