விருதுநகரில் தொடங்கியது திமுக மாநாடு: விபத்தில் 2 தொண்டர்கள் பலி
விருதுநகர்:
விருதுநகரில் திமுகவின் தென் மண்டல மாநாடு இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. மாநாட்டில்லட்சக்கணக்கான திமுகவினர் குவிந்துள்ளனர்.
இதில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதி நேற்றிரவு ரயில் மூலம் விருதுநகர் புறப்பட்டார். காலையில் அவருக்குவிருதுநகர் ரயில் நிலையத்தில் மிகப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுகவின் வழக்கப்படி தொண்டர்கள் குடும்பங்களுடன் மாநாட்டில் குவிந்துள்ளனர். டெல்லி செங்கோட்டைபோன்ற நுழைவு வாயிலுடன் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலுக்கு முரசொலி மாறன் நகர் என்றுபெயரிடப்பட்டுள்ளது.
காலை 9.55 மணிக்கு திமுக கொடியை முன்னாள் மத்திய அமைச்சர் எச்.ராஜா ஏற்றி வைத்து மாநாட்டைத் துவக்கிவைத்தார். பின்னர் மாநாட்டுத் திடலை நடிகர் சரத்குமார் திறந்து வைத்தார். மாநாட்டுக்கு முன்னாள் மத்தியஅமைச்சர் டி.ஆர். பாலு தலைமை தாங்குகிறார். 10.45 மணிக்கு கருணாநிதி விழா மேடைக்கு வந்தார்.
மாநாட்டுத் திடலில் நுழைய ஆண்களுக்கு கட்டணம் ரூ. 20ம், பெண்களுக்கு ரூ. 10ம் வசூலிக்கப்படுகிறது.குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். விருதுநகரின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்திமுகவினர் குவிந்து வருகின்றனர்.
மாநாட்டில் பங்கேற்பவர்கள் அமர சுமார் 5 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் பிரமாண்ட மாநாட்டுத் திடலில்போடப்பட்டுள்ளன. சுற்றுப் பகுதி ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான மின் பஸ்கள், பஸ்களும் மாநாட்டுப்பந்தலுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இன்றும் நாளையும் நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கையை கருணாநிதிவெளியிடுகிறார். மக்களைவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலையும் அவர்வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டச் செயலாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தலைமையிலான திமுக நிர்வாகிகள் இருமாதங்களாக மாநாட்டு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
விருதுநகரில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு எல்லா சாலைகளிலும் திமுக கொடிகளும், தோரணங்களும்,வரவேற்பு வளைவுகளுமாகக் காட்சியளிக்கிறது.
நாளை இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் வாசன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன்,முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசுகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி நிறைவுரையாற்றுகிறார்.
விபததில் 2 தொண்டர்கள் பலி:
இதற்கிடையே திருச்சி அருகே காரும் லாரியும் மோதிக் கொண்டதில் மாநாட்டுக்கு வந்து கொண்டிருந்த இரு திமுகதொண்டர்கள் பலியாயினர். அல்லூர் என்ற இடத்தில் இன்று காலை இந்த விபத்து நடந்தது.












Click it and Unblock the Notifications