மதிமுகவினரின் ஜாமீனை எதிர்க்கும் தமிழக அரசின் மனு தள்ளுபடி
டெல்லி:
வைகோவுடன் கைது செய்யப்பட்ட 8 மதிமுகவினருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்துசெய்யக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
நீதிபதிகள் ராஜேந்திர பாபு, மாத்தூர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதைத் தவிர இவர்கள் வேறு எந்தக் குற்றமும் செய்யவில்லை. அவர்களைஏன் மீண்டும் தமிழக அரசு தண்டிக்க நினைக்கிறது?. சாட்சிகளை அவர்கள் கலைத்துவிடுவார்கள் என்ற வாதம்ஏற்கத்தக்கது அல்ல என்றனர்.
நெடுமாறனின் பொடா எதிர்ப்பு மனு வாபஸ்:
இதற்கிடையே பொடா சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறனின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதே போன்ற வழக்கை பொடா மறு ஆய்வுக் குழுவின் முன்பும் தாக்கல் செய்துள்ளதாலும் அங்கு அந்த மனுவிசாரிக்கப்பட்டு வருவதாலும் உச்ச நீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெறுவதாக நெடுமாறனின் வழக்கறிஞர்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications