மதுரையில் தொகாடியா கூட்டத்தில் டியூப் லைட் வெடிப்பு
மதுரை:
மதுரையில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசிய கூட்டத்தில் திடீரென டியூப் லைட்வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் நேற்றிரவு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் வாழ்வுரிமை மாநாட்டில் தொகாடியா பேசினார்.அவர் கூறுகையில், தலித் மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் எந்த இயக்கத்தையும் வி.எச்.பி. ஆதரிக்கும்.
இந்து மதத்தில் வர்ணாஸ்ரம தர்மத்துக்கோ, தீண்டாமைக்கோ இடமே இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டஅடிக்கல் நாட்டு விழாவைக் கூட பிகாரைச் சேர்ந்த தலித் ஒருவரை வைத்துத் தான் நடத்தினோம் என்றார்.
தொகாடியா பேசிக் கொண்டிருந்தபோது மேடைக்கு மிக அருகே இருந்த ஒரு டியூப் லைட் வெடித்துச் சிதறியது.ஏற்கனவே அவரது கூட்டத்துக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு இருந்ததால் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
இந் நிலையில் டியூப் லைட் வெடித்ததை குண்டு வெடித்ததாக சிலர் கதை கட்டிவிட அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு ஓடி வந்தனர். வெடித்தது டியூப் லைட் தான் என்று மைக் மூலமாகஅறிவிக்கப்பட்ட பின்னரே அங்கு அமைதி திரும்பியது.












Click it and Unblock the Notifications