கார் மீது அரசு பஸ் மோதல்: பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் சாவு
திருக்கழுக்குன்றம்:
திருக்கழுக்குன்றம் அருகே கார் மீது அரசு பஸ் மோதியதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் செயலாளர்நாகராஜன் உள்ளிட்ட 3 பேர் பலியாயினர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே இன்று காலை இந்த விபத்து நடந்தது. தனதுகுடும்பத்தினருடன் நாகராஜன் காரில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கிவந்து கொண்டிருந்த அரசு பஸ் கார் மீது படுவேகத்தில் மோதியது.
இதில் நாகராஜன் (வயது 40), டிரைவர் ஹரி, 7 வயது சிறுவன் ஜீவா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாயினர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
3 திமுக தொண்டர்கள் பலி:
அதே போல நேற்று விருதுநகரில் நடந்த திமுக மாநாட்டில் பங்கேற்க வந்த வேலூரைச் சேர்ந்த 3 தொண்டர்கள்உணவருந்துவதற்கக ஆட்டோவில் சென்றனர்.
விருதுநகர் பி.ஆர்.சி. டெப்போ அருகே அந்த ஆட்டோ மீது வேன் மோதியில் அந்த 3 பேரும் பலியாயினர்.ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications